இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையாளராக இன்று பதவியேற்கும் சஹாபுதீன் யாகூப் குரேஷி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்த நகைப்பிற்குறிய சில தகவல்கள்:
இறப்புச் செய்தி
நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, மர்ஹும் அஹமது மியான் அவர்களின் மகனாரும், ஜாக்கிர், இலியாஸ், பைஜல் இவர்களின் தகப்பனாரும், உதுமான் அலி அவர்களின் மாமனாருமாகிய ஜனாப் மிலிட்டரி சேட் என்கிற A. கவுஸ் மியான் அவர்கள் புதன்கிழமை (28.07.2010) அன்று பரங்கிப்பேட்டையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
பரங்கிப்பேட்டை அருகே விபத்து: மினி டெம்போ கவிழ்ந்து 26 பேர் படுகாயம்
பரங்கிப்பேட்டை, ஜுலை.29-
பரங்கிப்பேட்டை அருகே மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் தனியார் டாக்டர்கள் விரைந்து வந்து மருத்துவ உதவி செய்தனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பெரியக்குப்பத்தில் நடந்த ஒரு சாவு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் புதுக்குப்பத்திற்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லை.
பரங்கிப்பேட்டையில் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு கருத்தரங்கம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. சேர்மன் முத்து பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சந்திரகாசன், சந்தர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜமுனாமேரி வரவேற்றார்.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த ரூ.8.60 கோடி: 25 ஆண்டு கனவு நனவாகிறது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே 30 மீனவ கிராம மக்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் அன்னங்கோவில் முகத்துவாரம் சுனாமி அவசர கால மறுகட்டமைப்பு திட்டத்தில் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக ஆழப்படுத்தப்படுகிறது.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று வழியாக கடலுக்குச் செல்ல முகத்துவாரம் உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டிய சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க இந்த முகத்துவாரம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.
உயிருக்கு உலை வைக்கும் கிழக்கு கடற்கரை சாலை
கடற்கரை நகரங்களையும், கிராம சாலைகளையும் இணைக்கும் விதமாகவும், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைக்கும் விதமாகவும் இ.சி.ஆர். என்ற கிழக்கு கடற்கரை சாலை 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு பிரதான சாலையாக இந்த ஈ.சி.ஆர். பயன்படுகிறது. சுற்றுலா தலங்களான முட்டுக்காடு ஏரி, மாமல்லபுரம் மற்றும் பீச்சுகள் நிறைந்து காணப்படும் பகுதிகள் வழியாக இந்த சாலை செல்வதால் வார இறுதி நாட்களை கழிக்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, சென்னைவாசிகளுக்கும் இந்த சாலை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பினர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லா மாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கி கொண்டிருந்தது.
ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
உலகின் முன்னணி சரக்கு விமான நிறுவனங்களுல் ஒன்றான லூப்தான்ஸா விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் 90 டன் எடையுடன் நேற்று காலை ரியாத் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீப்பிடித்து இரண்டாக உடைந்தது.. விமானியும், துணை விமானியும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லூப்தான்ஸா விமான நிறுவன வல்லுநர்கள் குழு ரியாத் விரைந்துள்ளது
கடற்கரையோர காடுகளை அழிக்கக் கோரும் கடலோர காவல்படை
துறைமுகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனவே கடலூர் மாவட்ட கடற்கரையில் உள்ள காடுகளை அழிக்க வேண்டும் என்று, கடலோரக் காவல் படை கோரிக்கை வைத்துள்ளது. கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வனத்துறைக்கும் தனியாருக்கும் சொந்தமான காடுகள் நிறைய உள்ளன. இவற்றில் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள், பனை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன 2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தக்கியபோது, மரங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகள், சுனாமி பாதிப்பில் இருந்து பெரிதும் தப்பின.
முதல் இந்திய உலவி!
கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரெளசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
மேலதிகக் ஆக்கங்கள்...
பக்கம் 1 - 47
















