இன்று (பிப்ரவரி 4) உலக புற்றுநோய் தினம். உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை தடுக்கும் முறைகள், அதற்கான சிகிச்சைகள் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி 'உலக புற்றுநோய் எதிர்ப்புக்கழகம்'' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பணக்கார நாடுகளின் நோய் என்று முன்னர் கருதப்பட்டுவந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இந்நோயினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்ந்து விடும் நிலை காணப்படுகிறது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் ஷின் யங் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் 1.7 கோடியை தாண்டிவிடும். இந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 76 இலட்சத்தையும் விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். உலகில் 8 பேர் இறந்தால் அவர்களில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார். ஆண்டு தோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடிப் பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ள ஷின் யங் சூ, புற்றுநோய் மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்றும் கூறுகிறார்.இன்று உலகில் மனித உயிர்களைப் பறிப்பதில் புற்றுநோய் தான் முதலிடம் வகிக்கிறது. ஒரு வருடத்தில் 76 இலட்சம் பேரின் உயிரினைக் குடிக்கும் இந்நோய் இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்தவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுவரை புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை 8 கோடியாக இருக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிகரெட் புகைப்பதனால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேராகவும் அதேயாண்டு உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் மட்டும் இரண்டு இலட்சம் பேராகவும் உள்ளது. புற்றுநோய் குறித்து உலகளாவிய ரீதியில் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவுஇ உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தல், போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.
எனவே வளரும் நாடுகள் உள்பட அனைத்துலக நாடுகளில் புற்றுநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதுடன் புற்றுநோய் குறித்த சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்தி மக்கள் மத்தியில் நோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விட்டால் புற்றுநோய் மரணங்களில் 50 வீதத்தையேனும் தடுக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும். இது விஷயத்தில் நாம் மெத்தனமாக செயற்பட்டால் போவது நமது உயிராக இருந்தாலும் நாளை பாதிக்கப்படப் போவது நமது குடும்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்தால் உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான புற்றுநோயிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் ஒட்டுமொத்தத்தில் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை மறப்போம்... புற்றுநோயை இல்லாமல் செய்வோம்.
- Comments















Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்