Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

பெற்றோர் மாநாட்டுத் துளிகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
* மாநாடு 3 மணிக்கு துவங்கினாலும், 2.30 மணியளவிலிருந்தே பெண்கள் கூட்டம் அலை மோதியது.

* பெண்களுக்கு சிறப்பான ஏற்பாடும்-இடவசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் நுழையமுடியாத அளவிற்கு தனி பகுதியாக இருந்தது.

* பெண் பார்வையாளர்ளுக்கு உதவிகள், நற்பணிகள் செய்வதற்காக திறன் படைத்த சிறுமிகள் தொண்டர் படையாக வலம் வந்தனர்.

* இதுவரை எந்த ஒரு விழாவிலோ (அ) கூட்டத்திலோ கண்டிராத மாபெரும் கூட்டத்தை இங்கு காணமுடிந்தது.

* பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன் முறையாக என்று இனி டைட்டில் போட்டுக்கொள்ளும் அளவிற்கு குடும்பத்தினருடன் வருகை புரிந்து கடைசி வரை இருந்தனர்.

 * கண்டிப்பாக பெண்கள் பகுதிக்கு கேமரா அனுமதியில்லை என்கிற அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் மீடியாவுக்காக புகைப்படம் எடுக்க விரும்பியும் கடைசிவரை விழா கமிட்டியினர் அனுமதிக்கவில்லை.

* முதல் அமர்வு அஸர் தொழுகை வரை நடைபெற்றது. இதில் தொடக்க உரையை தொடர்ந்து மீராப்பள்ளி இமாம் மற்றும் அல்ஹசனாத் மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி உரை நிகழ்த்தினர்.

* இரண்டாவது அமர்வில் (மஃரிப் வரை) சதீதுத்தீன் பாகவி உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமை உரையாற்றினார்.

* கடைசி அமர்வில் சலீம் சிறப்புரையாற்றினார். பின்பு கல்விக் குழுதலைவர் ஹமீது மரைக்காயர் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்து நன்றி கூறினார்.

* மாநாட்டில் பங்குபெற்ற அனைவருக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

* மணடபம் முழுவதும் (மாடி உட்பட) பெண்களே ஆக்கிரமித்திருந்தினர். ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

* சமையற்கட்டு மற்றும் மண்டபத்தின் வெளி பகுதி முழுதிலும் ஆண்கள் பார்வையாளர்களாக இருந்தனர்.

* கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து அமைப்பினரையும் ஒன்றினைத்தது இந்த இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு.

* குறிப்பாக,  இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை பகல் 2.30 மணி முதல் இரவு 8 மணி வரை அலைகழிக்காமல் ஒரே இடத்தில் பொறுமை காக்க வைத்தது இம்மாநாடு செய்த சாதனை.

  • vajhudeen  - மாஷா அல்லாஹ்
    ஸலாம்

    இந்த அளவிற்கு வெற்றி பெற செய்த இறைவனுக்கே புகழனைத்தும்.

    இந்த மாநாட்டை திறம்பட செயல்படு
    த்திய மாநாட்டு குழுவிற்கும், ஏற்பாடு செய்த சிங்கை வாழ் பரங்கியர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செ
    ய்வானாக!

    இறுதியாக மாநாட்டில் கலந்துக்கொண்ட னைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    மாநாட்டு தீர
    ்மானங்களையும் பதிவிட்டால், வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு சந்தோசமாக இருக்கும்.

    வஸ்ஸலாம்

  • நௌஷாத் அலி  - பெற்றோர்கள் மாநாடு ..

    அல்லாஹ் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி..
    விழா கமிட்டியினருக்கும் ,
    ஜமாஅத் மற்றும் சிங்கை சகோக்களுக்கும் நன்றி கூறி...

    இன்னும் இதுபோன்ற பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
      நடத்தி நமது சமுதாய மக்கள் பலன்பெற வல்ல நாயன் துணை புரிவானாக.

    இதை நேரில் காண அங்கில்லையே என்ற ஒரு கவலை....
  • MEERA HUSSAIN MARICAR
    பரங்கிப்பேட்டை நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் MYPNO டீம் இளைஞர்களுக்கு முதலில்
    நன்றியும், தொடரும் செயல்பாட்டிற்கு வாழ்த்துக்களும்...!

    நாகரீகத்தின் போர்வையை போர்த்தி கொண்டு இன்
    றைய உலகில் நிலவி வரும் கேடுகளை களையும் விதமாக நடத்தப்பட்ட இதுப்போன்ற மாநாடு(கள்) அத்தியாவசிய தேவையா
    கிவிட்டது. மாநாட்டு உரைகள் எல்லாம் கேட்பதற்கு அல்ல மாறாக ஓவ்வொருவரும் அவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்க
    வேண்டிய நெறிமுறைகள் என்பதினை குழுமிய கூட்டங்களிலிருந்து குறைந்த பட்சம் ஒருவர் முன்வந்தால் கூட அது
    வெற்றி தான்.

    கூட்டத்தில் பெண்கள் கூட்டமே அதிகம் என்பதை அறிகையில், நல்ல விஷயங்களை செவியேற்க நாங்கள்
    எ ப்போது தயார் தான், ஆனால் சொல்ல தான் ஆள் இல்லையே என்று மறைமுகமாக திரளாக வருகை தந்ததின் மூலம் உணர்த
    ்தி இருக்கிறார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    சமூகத்தினை நல்லதொரு வழியில் கட்டியெழுப்ப முனைந்தி
    ட்ட சிங்கப்பூர் வாழ் பரங்கியர்கள் பாராட்டுக்குறியவர்கள்.
    எல்லாப் புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்
    கே..!
  • நன்பன்
    அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்),

    இது வரை நாம் கண்ட நிகழ்ச்சிகளிள் பெண்களுக்குத்தான் தனி இட வசதி செய்யப்பட
    ்டிருக்கும்..........


    சற்று மாற்றாக இங்கு ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது! ஆச்சரியமா
    கத்தான் இருந்தது.....

    மாஷா அல்லாஹ் இவ்வளோ கூட்டமென்பது உங்களூரில் பெற்றோர்களின் அக்கரையை காட்டுக
    ின்ற்து ( பெற்றோர்கள் மாநாடள்ளவா?! இது )

    இம்மாநாடு அமைய காரனமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும்
    அல்லாஹ் நற்கூளி வழங்குவான் இன்ஷா அல்லாஹ்..!

    மாநாடு சிறந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்...
Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."