Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் பிரதமர் ஆதரவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பெங்களூர், ஜூலை 28: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்குநிரந்தர உறுப்பினர் பதவி வழங்க பிரிட்டன் முழு ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பெங்களூருக்கு வந்துள்ள கேமரூன், எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் செயல்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்தார்.   

அப்போது அங்கு நிருபர்களுக்கு கேமரூன் அளித்த பேட்டி: இந்தியா வளரும் சக்தி வாய்ந்த நாடு மட்டும் இல்லை. உலக சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது.

பல்வேறு வகைகளில் முன்னணியில் இருக்கும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த உறுப்பினர் பதவி வழங்க இந்தியாவுக்கு பிரிட்டன் முழு ஆதரவு வழங்கும். பிரிட்டனின் நிலையும் அதேதான். இந்தியா அல்லது எந்த நாடுக்கும் எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்தால் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கேமரூன்.

ரூ.9500 கோடியில் 57 பயிற்சி விமானங்கள்: பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம் நிறுவனத்திடம் இருந்து ரூ.9500 கோடி செலவில் 57 நவீன ஹாக் பயிற்சி ஜெட் விமானங்களை வாங்க பிரதமர் கேமரூன் முன்னிலையில் இந்தியா புதன்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டது.

Source: Dinamani

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."