Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

மும்பையில் இருந்து டெல்லி சென்ற விமான பயணிகள் 114 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

மும்பையில் இருந்து டெல்லி சென்ற      விமான பயணிகள் 114 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்;       காற்றுத் தடுப்பு கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரை இறக்கப்பட்டதுஆமதாபாத், ஜூலை29-

மும்பை- டெல்லி நகரங்களுக்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் மும்பையில் இருந்து டெல்லிக்கு ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 114 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது முன்பக்க காற்று தடுப்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழில் நுட்ப கோளாறு ஏற்படத் தொடங்கியது. 

எதிர்பாராத இந்த பிரச்சினையால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

நடுவானில் அந்த விமானம் தத்தளித்தபோது, குஜராத் வான்வெளி எல்லையில் இருந்தது. இதனால் விமானத்தை ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் விமான நிலையத்தில் தரை இறக்க தீர்மானிக்கப்பட்டது. 

மிக மெதுவாக அந்த விமானம் பறக்க விடப்பட்டது. மாலை 4.40 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 114 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

Source: Maalai Malar

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."