
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜுன் 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது மே 31ம் தேதி வரை என்று இருந்தது.
ஆனால், விண்ணப்பம் வழங்குவது மே 31ம் தேதியே கடைசி நாள் என்றும் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மே 11ம் தேதி முதல் தமிழகத்தில் 58 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை வரை 1,90,457 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.


