Tuesday, May 21st

Last update:06:11:18 PM GMT

You are here:

வளைகுடா

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் ஸவூதி பெண்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் ஸவூதி அரேபியா பெண் என்ற பெருமையைப் பெற்றார் ரஹா முஹர்ரக் (25).

விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதற்கு சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் ரஹா சாதனை புரிந்துள்ளார்.

இச்சாதனை குறித்து அவரது தந்தை ஹசன் முஹர்ரக் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சனிக்கிழமை மாலை முஹர்ரக் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். ரஹாவும் மிக்க மகிழ்வுடன் உள்ளார் என்றார்.

'எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற....

திங்கட்கிழமை, 20 மே 2013 12:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சவூதி வாழ் இந்தியர் கவனத்திற்கு: இந்தியத் தூதர் செய்தியறிக்கை..!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
Indian Embassy - Riyadh

சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர் சட்ட மீறல்களைச் சரி செய்து சட்டத்திற்குட்பட்ட வகையில் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ள சவூதி அரசாங்கத்தின் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரியாத்திலுள்ள இந்தியத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்காலிக கடவுச்சீட்டுகளை ப் பெறவும், தங்களின் பணி சார்ந்த பிற விவகாரங்களை தீர்த்துக்கொள்ளவும்,  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தினமும் தூதரகத்தை அணுகி வருகின்றனர், அவர்களுக்கு உதவும் நோக்கில் சவூ....

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 14:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முக்கியச் சாலைகளில் கார் டயர்களை தீவைத்துக் கொளுத்தி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், தலைநகர் மனாமாவில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. கலவரக்காரர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபார்முலா-ஒன் கார் பந்தயம் நடக்க இருக்கும் நிலையில், பார்முலா ஒன் கார் பந்தயத்தின்போது, உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக, போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

ஈரான் நிலநடுக்கம் - அரபு நாடுகளில் வீதியில் குவிந்த மக்கள்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
துபாய்: ஈரானில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013 13:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

பக்கம் 1 - 6