பரங்கிப்பேட்டை : சுமார் 1.52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், படகு குழாம், ஹைதர்அலி நினைவு பூங்கா, நூலக கட்டிடம் ஆகியவற்றை இன்று துணை முதல்வர் ஸ்டாலின் காட்டுமன்னார் கோயிலில் இருந்து ரிமோட் மூலம் திறந்து வைக்கிறார்.
நீண்ட நாட்களாக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் சுற்றுலா வளர்ச்சி மையத்தில் படகு குழாம், ஹைதர்அலி நினைவு பூங்கா, குடில்கள், உணவு விடுதி மற்றும் குழந்தைகள் பூங்கா, பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலவலக கட்டிடம் அடிக்கல் நாட்டுதல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரசந்தை, நாளங்காடி, 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்டவைகளை காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

- Comments
!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."
| < முன் | அடுத்தது > |
|---|
